தினந்தோறும் 'ஓம்' பிரணவ படத்தையோ அல்லது 'ஓம்' பிரணவ விக்ரகத்தையோ
வைத்து அதற்குத் தீபம் ஏற்றி, புஷ்பங்களை சாத்தி, குரு சுலோகம், கடவுள் ஜப மந்திரம், ஆத்மநிஷ்டை, ஜெய ஓம் பாட்டு, ஜெயபரமாத்மா சுலோகம் சொல்லி, பிறகு நிற்குண அஸ்டோத்ர அர்ச்சனை செய்து வந்தால் மக்களின் குறைகள் தீர்ந்து பிணி, பீடை அகன்று, வறுமை நீங்கி, மங்கள வாழ்வு ஏற்படும், கடவுள் அருளால் பரமார்த்திகம் உண்டாகும்.
அறிமுகம்
சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள்
உலக மக்கள் முன்னேற்றத்திற்காக அடியிற்கண்ட நிறுவனங்களுடன் கூடிய ஞானோதய ஆலய (கேந்திரம்) சுவாமிகளால் 24.06.1951 ஸ்தாபனம் செய்யப்பட்டது.
- ஞானோதய மன்றம்
- ஞானோதய அன்னதான சாலை
- ஞானோதய விசுவ வித்யாலயம்
- நிஷ்காமிய சேவா சங்கம்
சுவாமியின் வாழ்விலிருந்து
சுவாமியின் வாழ்விலிருந்து சில சுவையான அனுபவங்களை இங்கே காண்போம்...
ஆவடியில் ஐந்து நாட்கள் மிகவும் தீவிரமான ஜெப சாதனையை மேற்கொண்டார்கள். குறிப்பிட்ட நாள் இரவில் அறையில் ஜெப சாதனையில் ஈடுபட்டுக் கொண்ருந்தபோது ஸ்ரீராமரையும், சீதையையும், இலட்சுமணரையும், ஆஞ்சநேயரையும் சுவாமிகள் தரிசித்தார்கள்.
நல்லாங்குப்பம் காளி கோயிலில் சுவாமிகள் இரவு நேரங்களில் பலமணிநேரங்கள் நிஷ்டையில் அமர்திருப்பார்கள். 01-06-1950-ஆம் தேதியிலிருந்து சுவாமிகள் மௌன விரதம் பூண்டு காளி கோயில் எதிரில் ஒரு குழியில் அமர்ந்து தினந்தோறும் பல மணி நேரம் நிஷ்டை புரிந்தார்கள். பிரதி தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமிகளை வந்து தரிசித்தனர். காளி கோயில் சமீபத்தில் 24-06-1950-ல் நள்ளிரவு 12 மணிக்கு 'ஜீவசமாதி' அடைவது என்னும் எண்ணம் சுவாமிகளுக்கு உதித்தது. அவ்வெண்ணத்தை சீடர்களுக்கு தெரிவித்தார்கள். மௌனத்தில் இருந்த காலத்தில் தினந்தோறும் மாலைவேளைகளில் குழியிலிருந்தவண்ணம் சீடர்களின் மூலம் குழுமியிருந்த பக்தர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். 24-06-1950 அன்று காளி கோயிலை சுற்றிலும் பல்லாயிர கணக்கான மக்கள் சுவாமிகளை தரிசிக்க கூடிவிட்டனர். சுவாமிகள் கோயிலின் மேல்தளத்தில் நின்றுகொண்டு அனைவருக்கும் தரிசனம் கொடுத்தார்கள். ஜனங்கள் சுவாமிக்கு பழங்கள், பணம், இனிப்பு பட்சணங்கள் முதலியவற்றை சுவாமிகளுக்கு சமர்பித்தனர். அவற்றை எல்லாம் சுவாமிகள் ஜனங்களுக்கு நாலாபக்கங்களிலும் வீசி எரிந்தார்கள். பிறகு சுவாமிகள் கோயிலின் மீதிருந்து இறங்கி வந்து கோயில் முன் இருக்கும் பலிப்பீடத்தில் அமர்ந்தார்கள். பலிப்பீடத்தில் நிஷ்டையில் அமர்திருந்த சுவாமிகள் நள்ளிரவு 12 மணிக்கு ஜீவசமாதி எய்தி சுயநினைவை இழந்து ஆண்டவனுடன் ஒன்றறக் கலந்த நிலையில் இருந்தார்கள். போலீசார் பயபக்தியுடன் சுவாமிகளை தூக்கிச்சென்று காளி கோயிலுக்குள் வைத்து கதவை மூடிவிட்டனர். அப்போது கனத்த மழை பெய்தது. 18 மணி நேரம் ஜீவசமாதியில் இருந்த பிறகு 25-06-1950 ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு ஜீவசமாதியிலிருந்து கலைந்து சுவாமிகள் கோயிலின் வெளியே வந்தார்கள்.
பக்தர்கள் வருகை
ஆண்டுதோறும் குருவின் அருள்வேண்டி அவரை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கான தோராயமான எண்ணிக்கையின் வரைபடம்.